கொழும்பில் பல பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு

266 0
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று (18) காலை முதல் 12 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த நீர் வெட்டு, இன்று (18) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் இடம்பெறவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில்  களனி பிரதேச சபை பிரதேசங்கள், பேலியகொட நகர சபை பிரதேசங்கள்,  வத்தளை நகர சபை பிரதேசங்கள், ஹெந்தள பிரதேச சபை பிரதேசங்கள் ஆகிய  பிரதேச மற்றும் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.
களனி மற்றும் வத்தளை பிரதேசத்திற்கு நீர் விநியோகிக்கப்படும் நீர்க்குழாய்கள் இரண்டில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய இருப்பதன் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சபை மேலும் அறிவித்துள்ளது