களுத்துறையில் பயாகலை – துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
துவகொட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சிறுவன் கடந்த 09 ஆம் திகதி அன்று தனது வீட்டிற்கு அருகில் சிறுவன் ஒருவனுடன் இணைந்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

