முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

314 0

முல்லைத்தீவு- முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கா ல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரி யவருகின்றது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றினை முள்ளிவாய்க்காலில் அருட்தந்தை எழில்ரஜன் மற்றும் சிலர் இணைந்து ஒழுங்கமைப்பு

செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றய தினம் அருட்தந்தை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தி ற்கு அழைத்து விசாரிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அருட்தந்தை ஒழுங்கமைத்திருந்த நினை வந்தல் நிகழ்

வுக்கு பொலிஸார் நீதிமன்றம் ஊடாக 14 நாட்கள் தடை உத்தரவு கொடுத்துள்ளதாக உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தடை உத்தரவு அருட்தந்தை ஒழுங்கமைத்திருந்த நினை வேந்தல் நிகழ்

வில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் நாட்டப்படவிருந்தது.

அந்த கற்களி ல் தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர்கள் சிலரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறியே இந்த தடை உத்

தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.