எதிர்கட்சி தலைவருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு கையளிப்பு

305 0

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் சார்பில், அவரது அலுவலகத்தில் வைத்து அந்த மனுவினை நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் பெற்று கொண்டார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் எம் ஏ சுமந்திரன், கோரிக்கை ஒன்றையும் முன்வைத்ததாக எதிர் கட்சி தலைவரின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இதுபோன்ற தொரு மனுவினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கும் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.