இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 34 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

326 0

 மன்னார் உயிலங்குளம்   பகுதியில்   ஸ்ரீலங்கா இராணுவத்தினரால்   1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூரி   அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

தாயகப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் தமிழர் படுகொலை வாரத்தின் 6 ஆம் நிகழ்வுகள் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இதேவேளை, படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்  மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வடமாகாணசபையின் ஏற்பாட்டில்  நேற்று இடம்பெற்றது.