யாழ் தொழில் துறை திணைக்களத்திற்கு முன்னால் நோத் சீ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

267 0
யாழ்ப்பாணம் நோத்சீ நிறுவனத்தில் தொழில் புரியும் மற்றும் இளைப்பாறிய ஊழியர்கள் 14 பேருக்குரிய சம்பளம் இ.பி.எப், இ.டி.எப் கொடுப்பனவுகளை  வழங்கக்கோரி அதன் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு முன்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 30 வருடங்களாக சேவையாற்றிய ஊழியர்கள் கலந்து கொண்டு பணிக்கொடையை உடன் பெற்றுத்தா, பணிக்கொடையைப் பெற்றுத்தர பின்னடிக்காதே, நோத்சீ நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கை எடு, எனும் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.