தென்மராட்சியில் நேற்றிரவு இளைஞர் குழு அட்டகாசம்

279 0
சரசாலை வடக்கு பகுதியில் நேற்றிரவு இரவு  10 மணியளவில் இளைஞர் குழுவினர் நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் சரசாலை வடக்கு குட்டிப்பிள்ளையார் கோவில் உண்டியல் மற்றும் அருகில் இருக்கும் வீட்டு மதில்,வர்த்தக நிலையத்தில் ஒடுகள் ,என்பவற்றை உடைத்துள்ளனர்.
அத்துடன் சரசாலை ஶ்ரீகணேச வித்தியாலத்துக்கு முன்பாக பழைய கண்ணாடிகள் உடைந்த போத்தல்களை கொண்டுவந்து பாடசாலைக்கு முன்பாக கொட்டியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக சரசாலை வடக்குப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.