முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அருட்தந்தை எழில்ராஜன் பொலிஸாரால் விசாரணை!

276 0

முல்லைவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை (18)  முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த குறித்த அருட்தந்தை நேற்று  இரவு எட்டு மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.