இலங்கையின் சமாதானம் நல்லிணக்கத்திற்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு – சீன ஜனாதிபதி உறுதி

231 0

இலங்கையில் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்காக சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அந்ந நாட்டு ஜனாதிபதி ஸி ஜின் பிங் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பீஜிங்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்காக 2 பில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா வழங்கும் உதவிகளுக்காக அந்நாட்டு ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.