அதிகாரம் இல்லாத வடக்கு மாகாணசபை ஒரு சுடமுடியாத துப்பாக்கி – எஸ்.மயூரன் (காணொளி)

276 0

வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ளது,

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எஸ்.மயூரன், யுத்தகாலத்திலிருந்து பணியாற்றிய இந்த சுகாதாரத் தொண்டர்களின் போராட்டமானது நியாயமானது என்று கூறினார்.

அவர்களுடைய கோரிக்கையை வடக்கு மாகாணசபையின் பக்கம் திருப்புவதென்பது பொருத்தமற்ற விடயமாக உள்ளதென்று கூறினார்.