மட்டக்களப்பு கல்லடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

334 0

மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண்  ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.