யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…(காணொளி)

425 0

இன்று காலை 11.30 மணியளவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும், குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.