டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி

283 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் 15.05.2017 இன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதின்ற முன்றலில் உணர்வு பூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை பல்லினமக்கள் மிகவும் கவனத்துடன் பார்வையிட்டார்கள். செயற்பாட்டாளர்கள் பல்லினமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர். இக் கண்காட்சிகள் ஊடாக எங்கள் மக்கள் பட்ட துன்பங்களை பல்லினமக்களுக்கு எடுத்துக் காட்டக்கூடியதாக இருந்தது.
நாளையதினம் 16.05.2017 அன்று டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் தமிழின அழிப்பு கண்காட்சி நடைபெறும்.

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்