காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில்

514 0

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படும் என தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும் காரியாலயத்தை ஸ்தம்பிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த இதுவரை காரியாலயம் ஒன்று ஸ்தம்பிக்கப்படாமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.