மினுவாங்கொடை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த 18 பேர் கைது

281 0

மினுவாங்கொடை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகரிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 18 பேரும் தலா 15 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தரவினை கம்பஹா பதில் நீதவான்  அதுல குணசேகர பிறப்பித்துள்ளார்.