தந்தையொருவரை கொலை செய்த மகன் கைது

208 0

மாத்தறை – கோன்கஹஹேன பிரதேசத்தில் தந்தையொருவரை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் அறையினுள் தயாசேன என்ற நபரொருவர் உயிரிழந்து கிடப்பதாக காவற்துறைக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

43 வயதுடைய இந்த நபர் நேற்று இரவு 9.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன் போது , 19 வயதுடைய மகனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து மகனால் தடியொன்றால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.