புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது

246 0

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த புகையிரதம் நேற்று கடுகன்னாவை மற்றும் பலன புகையிரத நிலையங்கள் இடையே முதல் சுரங்கப்பாதையை கடந்து
கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் பலன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த கல்வீச்சால் புகையிரத சாரதி பெட்டியின் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.