கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது

212 0

மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் மினுவாங்ககொட மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஒருவர் தலா 15 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.