மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்வத்தை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இரத்வத்தை பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

