தமிழ் மக்கள் மீதான படுகொலையை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வின் 3ஆம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

393 0

வலிகாமம், மானிப்பாய் சென். பீற்றர்ஸ் தோவாலயத்திலும், சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த காலத்தில் பொது மக்கள் கொல்லப்பட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகிறன.

இதற்கமைய, 1995ஆம் ஆண்டு மானிப்பாய் நவாலி சென்.பீற்றர்ஸ் தோவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீச்சின் போது நூற்றுக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்ட தேவாலயத்தில் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வுகள்அனுஸ்டிக்கப்பட்டன.