நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது- சி.வி. விக்னேஸ்வரன்(காணொளி)

371 0

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு பல்வேறு வகையான பேராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் தூதுவருக்கு தெளிவு படுத்தியதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் இலங்கை விடயங்களை கவனிக்கும் அமெரிக்க அமைப்பின் தலைவருமாகிய வில் Nஐhன்சனை தனது அலுவலகத்தில் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் பயணம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கருத்து கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிவித்த வடக்கு  முதலமைச்சர் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் துனிந்த முடிவுகளை எடுக்காத காரணத்தினால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காலஅவகாசம் கொடுக்கப்பட்ட nஐனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கொடுக்கும்போதே தீர்மானங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருடனான, வடக்கு முதலமைச்சரின் சந்திப்பின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அப்துல் கெசாப் கலந்து கொண்டார்.