இரட்டை குடியுரிமை பெற்ற 8 பேர் நாடாளுமன்றத்தில்!

325 0

இரண்டு நாடுகளின் குடியுரிமை பெற்ற 8 பேர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைப் போல, ஏனைய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த 8 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.