மத்துகமவில் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

31 0

களுத்துறையில் மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எடகெஹெல்கல்ல வீதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் உள்ள கால்வாயிலிருந்து வெள்ளிக்கிழமை (04) மாலை மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது ஆணா அல்லது பெண்ணா என இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.