தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

388 0

தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நினைவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தாதியர் சேவையில் உள்ளவர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது.

தாதியர் சேவை மற்றும் வைத்திய சேவை வீழ்ச்சியடைந்துள்ளது என சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இருந்த போதும், அந்தசேவையில் உள்ள பெரும்பாலானவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் சொற்பமான எண்ணிக்கையினரே தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாது உள்ளனர்.

இந்தசேவையின் தரம், சேவையில் உள்ளவர்களின் மனங்களிலேயே தங்கியுள்ளது.
எனவே, தாதியர் சேவையின் தரத்தை மேம்படுத்தி அதற்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.