அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை.

298 0

டிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை. அதேபோல், திறப்பு விழாவில் இந்­தியப் பிர­தமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நான் நினைக்­க­வில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை வளவில் இந்­திய அரசின் நிதி­யு­த­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­ய­சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நோர்வூட் விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெற்ற பொதுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசு­கையில்,

நுவ­ரெ­லி­யாவில் வாழும் மலை­யக மக்­க­ளுக்கும் இலங்கை மக்­க­ளுக்கும் மட்­டு­மல்­லாமல் உலக மக்­க­ளுக்கே இன்று ஒரு முக்­கிய நாளாகும். ஏனெனில் சர்­வ­தேச வெசாக் தினம் இன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.பௌத்த மக்­க­ளுக்கும் இந்து மக்­க­ளுக்கும் ஆயிரம் வரு­டங்­க­ளாக இறுக்­க­மான உறவு இருந்து வரு­கின்­றது. அந்த இறுக்­கத்தை மேலும் அதி­க­ரிக்கும் வகையில் இந்­தியப் பிதமர் நரேந்­திர மோடி மலை­யக மக்­களை சந்­திப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை வளவில் முழு­மை­யாக நவீன வச­தி­க­ளுடன் வைத்­தி­ய­சாலை கட்­ட­டத்தை நிர்­மா­ணித்து கொடுத்து அதை திறந்து வைக்க வருகைத் தந்­துள்ள இந்­தியப் பிர­த­ம­ருக்கும் இந்­திய அர­சுக்கும் நன்றி கோரு­கின்றேன்.

இந்த கட்­ட­டத்­துக்கு 2011 இல் நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது அடிக்கல் நாட்­டினேன். அது திறந்து வைக்­கப்­படும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நினைத்­தி­ருக்­க­வில்லை. இந்த விழாவில் பிர­தமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நினைத்­தி­ருக்­க­வில்லை. எனவே இந்த சந்­தர்ப்­பத்தை பெரும் பாக்­கி­ய­மாக கரு­து­கிறேன்.

வர­லாற்று ரீதியில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்­பிட்­டது போல இரா­மா­யண காலத்து தொடர்பு இருந்து வரு­கி­றது. ஆங்­கி­லேயர் ஆட்சிக் காலத்தில் உலக மத்­தியில் மத்­தியில் மிகுந்த மதிப்பு கொண்­டுள்ள மகாத்மா காந்தி இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். இன்றும் அந்த தொடர்பு வலு­வ­டைந்து வரு­கின்­றது.

பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இந்­திய வம்­சா­வளி மக்கள் பிர­ஜா­வு­ரிமை பெறு­வதில் அர­சியல் ரீதி­யாக பல பிரச்­சி­னைகள் இருந்து வந்­தன. 1964 இல் ஸ்ரீமா – சாஸ்­திரி ஒபந்தம் செய்து கொள்­ளப்­பட்­ட­தன் பின்னர் படிப்­ப­டி­யாக பிர­ஜா­வு­ரிமை பெரும் நிலைமை ஏற்­பட்­டது. இன்று அனை­வருக்கும் பிர­ஜா­வு­ரிமை கிடைத்­துள்­ளது. இன்று நாம் தேசிய ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய நிலையில் உள்ளோம். சிங்­களஇ தமிழ்இ முஸ்லிம் மக்கள் மத்­தியில் ஒற்­று­மையை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தேசிய ஒற்­றுமை ஊடா­கவே இன­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். அதற்கு அர்ப்­ப­ணிப்­போடு அனை­வரும் செயற்­பட வேண்டும்.

வட பகுதி மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. என­வேதான், 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக பாரிய போராட்­டத்­துக்கு முகங் கொடுக்க நேர்ந்தது. அதேபோல்இ பெருந்தோட்ட மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம். மலையக மக்கள் ஏனைய மக்களுக்கு இணையாக வாழ்வதற்கு செயற்படுவோம் என்றார்.