மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல்வாதியான மெலிசா ஹோர்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம்(14.06.2025) மெலிசா ஹோர்ட்மேனின் வீட்டில் நடந்துள்ளது.
பொலிஸ் அதிகாரி போல வேடமணிந்து வந்து ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் பொலிஸ் வாகனம் போல தோற்றமளிக்கும் வாகனம் ஒன்றில் தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில செனட்டர் ஜோன் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனித்தனி துப்பாக்கிச் சூட்டில் தங்கள் வீட்டில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பலமுறை சுடப்பட்ட போதிலும் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

