முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

429 0

 

கேப்பாபுலவில் 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துள்ள மக்கள் கடந்த 7 வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் மக்களின் தொடர் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

எனினும் இதுவரை எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்த கேப்பாபுலவு மக்கள் தம்மை விரைவில் குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.