முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

243 0

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அந்த இடத்திற்குச் சென்று அந்த பகுதி மக்களுடன் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் மக்களை அழைத்து செல்வதற்கான இலவச போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்படவுள்ளன.என தெரிவிக்கப்பட்டுள்ளது