மட்டக்களப்பில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக…(காணொளி)

273 0

மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரை பகுதியில், வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் கடற்கரை பகுதியில் இருந்து 70 வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.