சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்

267 0

இஸ்ரேலுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்கள் அவர்களது தொழிற் காலம் முடிவடைந்தும் தொடர்ந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில் காலம் முடிவடைந்தும் தொடர்ந்து இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.