புத்தளம் – சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
198 கிலோகிராம் ஹெரோயின் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பென்டர் ரக வாகனமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிலியந்தல கால்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மீது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் சம்பவத்தில் மதூஸ் என்ற பாதாள உலக குழு தலைவர் தொடர்பு கொண்டுள்ளார்.
இந்தநிலையில், மதூஸின் அடியாள் ஒருவரே இந்த போதை பொருளை கடத்தி வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சளார் குறிப்பிட்டுள்ளார்.