சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் மீட்பு

292 0

புத்தளம் – சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.