மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும்

288 0

மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும் என்று, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த காற்றின் தாக்கம், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரைக்கும். காலி முதல் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையிலும் அதிகரித்து இருக்கும் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

ஆகையால், மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்வோர் மற்றும் கடல்ரோந்து பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் உள்ளிட்டோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை எதிர்வரும் 48 மணிநேரத்துக்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.