இலங்கை விஜயத்தின் போது மோடி தமிழக மீனவர்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தல்

244 0

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியஸ்த்தர் சர்வாணன் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு நரேந்திர மோடி தமது இலங்கை விஜயத்தை பயன்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தை தமது கட்சியின் செயற்பாட்டுத் தலைவர் மு.க ஸ்ராலின் ஏற்கனவே வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பிரதமர் மோடி இலங்கையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் எதனையும் நடத்த மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.