அனைத்து கட்சிகளுக்கும் பிரத்தியேக அமைச்சரவை பேச்சாளர்கள் – அமைச்சர் ராஜித்த யோசனை

232 0

அனைத்து கட்சிகளுக்கும் பிரத்தியேக அமைச்சரவை பேச்சாளர்களை நியமிப்பது சிறந்த விடயமாக அமையும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியினால் பிரத்தியேக அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறான நடவடிக்கை மிகவும் சிறந்த விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.