இலங்கையில் இருந்து அனுப்பட்ட போதை மாத்திரைகள் இத்தாலியில் சிக்கியன

218 0

இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் பாரிய அளவான போதை மாத்திரைத் தொகை ஒன்று இத்தாலியில் பிடிபட்டுள்ளது.

போராளிகளின் மாத்திரை என்று கூறப்படும் இந்த மாத்திரைகள், ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களின் ஜிஹாட் போராளிகளுக்கு மூர்க்கத்தனத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக இத்தாலியின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

37.5 டன் எடைகொண்ட 81.96 மில்லியன் டொலர்கள் பெறுமதியான குறித்த போதை மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து செம்போ போத்தல்கள் என்ற பெயரில் மறைத்து இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இத்தாலியின் விசாரணையாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.