களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது

229 0

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவொன்றினால் அத்துருகிரிய பிரதேசத்தில் இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அத்துருகிரிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இருவர் என்றும், அவர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் களுத்துறை எதனமடல பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தமை கூறத்தக்கது.