மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து திட்டம்

252 0

சர்வதேச வெசாக் நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி இந்தியப் பிரதமர் பயணிக்கும் பிரதான வீதிகளும் அதனுடன் இணையும் ஏனைய உள் வீதிகளும் முழுமையாக மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மூடப்படவுள்ள வீதிகளின் விபரங்கள் வருமாறு,

மே மாதம் 11ம் திகதி

பி.ப. 6.15 மணிக்கு – கட்டுநாயக்க அதிவேக வீதி, பேலியகொட, பொரளை பேஸ்லைன் வீதி, டி.எஸ் கல்லூரி போக்குவரத்து ஒளி சமிக்ஞை சந்தி, கிரீன் பார்க், தாமரைத் தடாகம், பொதுநூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, மல் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்காராம எல்லை வரை.

பி.ப. 07.15 மணிக்கு – கங்காராம எல்லையிலிருந்து நவம் மாவத்தை, உத்தரானந்த மாவத்தை, முகம்மது மாக்கான் மார்க்கார் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம், தாஜ் சமுத்ரா ஹோட்டல்.

பி.ப. 08.20 மணிக்கு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து காலி முகத்திடல் வீதி, ரவுண்டானாவில், என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், ஜனாதிபதி மாளிகை.

பி.ப. 10.30 மணிக்கு – ஜனாதிபதி மாளிகையிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி முகத்திடல் வீதி ஊடாக தாஜ் சமுத்ரா ஹோட்டல்.

மே மாதம் 12ம் திகதி

மு.ப. 09.05 மணிக்கு – தாஜ் சமுத்ர ஹோட்டல், காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி சந்தி, பித்தளை சந்தி, செஞ்சிலுவை சந்தி, பொது நூலக சுற்றுவட்டம், க்ளாஸ்ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டார்ஸ், சுதந்திரசதுக்க சுற்றுவட்டம், சுதந்திர மாவத்தை, பௌத்தாலோக மாவத்தை, மெட்லாந்ட் பிளேஸ் சந்தி, பௌத்தாலோக மாவத்தை ஊடாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம்.

மு.ப. 10.50 மணிக்கு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, ஜாவத்தை சந்தியால் இடதுபக்கம் திரும்பி, ஜாவத்தை வீதி, கெப்பட்டிபொல சந்தியால் வலது பக்கம் திரும்பி கெப்பட்டிபொல மாவத்தை ஊடாக பொலிஸ் மைதானம் வரை.

மேலே கூறப்பட்ட வீதிகள் ஊடாக இந்தியப் பிரதமர் பயணிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த வீதிகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளக வீதிகளும் மூடப்படும் அதேவேளை குறித்த வீதிகளின் ஒரு பக்க வழியில் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையுல் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க அதிவேக வீதியூடாக களனி பாலம் நுழைவினால் பேஸ்லைன் வீதிக்கு வரும் வரை, பிற்பகல் 5.45 மணி முதல் கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிய வீதி மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.