முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஆவணக்கோப்பு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் கூறுகிறது.
இந்த வருடம் மார்ச் 29ஆம் திகதியன்று அந்த ஆவணம் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கொமடோர் கே. சி வெலகெதரவின் சாட்சியங்கள் அடங்கிய ஆவணமே திருடப்பட்;டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணத்தில், வெள்ளைவேன் கடத்தல்களில் அரசியல்வாதிகளும் கடற்படையினரும் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் அடங்கியிருந்தன.
ஏற்கனவே கடற்படைக்கு தெரியாமல் வெளிநாடு சென்றமைக்காக வெலகெதரவுக்கு இராணுவ நீதிமன்ற விசாரணையும் நடத்தப்பட்டது.
இதன்போது அவருக்கு பதவிக்குறைப்பு செய்யப்பட்டபோதும் அது பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை லெப்டினன்ட் கொமடோர் வெலகெதர தொடர்ந்தும் கடற்படை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- வெள்ளைவேன் கடத்தல் – விசாரணை ஆவணக்கோப்பு களவு
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

