ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் நேற்று இரவு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
விசாக பூரணை பண்டிகை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சரவை ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.