இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின்போது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்தார்.
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மக்களுக்கு சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் அது தொடர்பில் முக்கிமாக அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.