போர் விமான வடிவமைப்பு – இந்தியா-ரஷியா இடையே விரைவில் ஒப்பந்தம்

255 0

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கூட்டாக வடிவமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே, 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு பல்வேறு விஷயங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால், இந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு விட்டதால், இந்த போர் விமான வடிவமைப்பு தொடர்பாக இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

இதுபற்றிய அனைத்து களப்பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், இதில் கையெழுத்திடுவது, பெரிய மைல்கல்லாக இருக்கும் என்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.