கொழும்பு – குருணாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்கஹவல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளது.
பொல்கஹவல பகுதியிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் வீதியில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வலகம்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.
இது தொடர்பில் பொல்கஹவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

