குப்பை பிரச்சினைக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பைஸர்

214 0

கண்டி- கொஹாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை மேடு ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த குப்பை மேட்டினால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் நிர்வாகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொளளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குப்பை பிரச்சினைக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.