பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ள ஒரே மாற்று வழி, நிவாரணங்களை குறைத்தல் மற்றும் வரி அறவீடுகளை மேற்கொள்வதே ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தாம் மக்களிடம் செல்வதை தவிர்க்கும் பொருட்டே தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
எனினும் தன்னை மக்களிடம் செல்வதை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.