யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – உடுத்துறை கடல் பிரதேசத்தில் வைத்து 21 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து பணிகளின் போதே இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்த கேரள கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக மருந்தங்கேணி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அநுராதப்புரம் – தன்நாயம்குலம் பிரதேசத்தில் ஹேரோயின் வியாபாரத்தில் ஈடுப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் லொக்கா எனப்படும் எச்.எம்.சுமேத என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவரிடம் இருந்த ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.