ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக தலையை துணியால் மறைத்து ஆண்கள் நூதன போராட்டம்

380 0

201607291459488725_Iranian-men-are-wearing-hijabs-in-solidarity-with-their_SECVPFஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்கள் தலையை துணியால் மறைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் தலையில் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மீது நன்னடத்தை போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிலர் தங்கள் தலையை மொட்டையடித்து அழகை குறைத்து கொண்டு பர்தா அணியாமல் வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களது மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்களும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மனைவியுடன் வெளியே செல்லும் ஆண்கள் தங்கள் தலையை துணியால் மறைத்து சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.