உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், காத்தான்குடி நகர சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி மீராப்பள்ளி வட்டார வேட்பாளர் ஈ.எம். றுஸ்வின், காத்தான்குடி பதுரியா வட்டார வேட்பாளர் எம்.ஐ.எம். அஜ்வத் பலாஹி, காத்தான்குடி அன்வர் வட்டார வேட்பாளர் எம்.எச்.எம். றிஸ்வி (BA) ஆகியோரை ஆதரித்து பிரச்சார காரியாலயங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், காத்தான்குடி பிரதேச கட்சியின் மத்திய முழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.






