புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

277 0

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் அளவில் வட்டவளை பிரிவிற்குட்பட்ட வட்டவளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் வட்டவளை இல.101 கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த நல்லகண்ணு காளியப்பன் (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.