பெங்களுர் அணிக்கு மீண்டும் தோல்வி

230 0

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 43 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ரோயல் செயல்ஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிரான இந்தப் போட்டி பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆராயல் செயலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 19 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.